districts

img

பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்போம் வேலூர் ஆட்சியர் உறுதி

வேலூர்,செப்.10 - வேலூர் அடுத்த கண்ணமங்கலம் கூட்ரோட்டில், கீழ்ப்பள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கண்ணமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடத்தில் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. தற்போது புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டிடங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை இணைக்கும் சாலையாக உள்ள, இந்த கண்ணமங்கலம் கூட்ரோட்டில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மூன்று வழித்தடங்களை இணைக்கும் இந்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி, பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக பயணிகள் தங்கும் விடுதி கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி பழுதடைந்த பய ணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தை ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு ஆட்சியர் பேசுகை யில், பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்ப தோடு, வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது வேலூர் வட்டாட்சியர் செந்தில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவகுமார், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.