districts

img

கடலூரில் கனமழை: ஊர்ந்து சென்ற வாகனங்கள்

கடலூர்,அக்.14 – கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் மாலை   3 மணியிலிருந்து இடைவிடாமல் கனமழை பெய்தது. இதையடுத்து கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர், நெய்வேலி, உள்ளிட்ட பல பகுதிகளில்  மழை நீர் தேங்கியதால் சாலை களில்  வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.  இதற்கிடையில் பள்ளிகளுக்கு விடுமுறை  விட்டதால் மாணவ மாணவிகள் மழையில் நடந்தபடியே வீடுகளுக்குச் சென்றனர். கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ள சூழலில் காற்றின் வேகம் 45 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது, இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை ஒட்டி முன்னேற் பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில்  24 மணி நேரமும் செயல்பட வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.  கட்டணமில்லா தொலைபேசி எண் 1077. தொலைபேசி எண் 04142 220700. வாட்ஸ் அப் எண் 9489930520 ஆகிய எண்ணுக்கு பருவமழை தொடர்பான தகவலை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி  ஆதித்ய சித்தர் குமார் தெரிவித்துள்ளார்.