districts

img

ரூ.68 கோடியில் வீராணம் ஏரி மேம்பாடு கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர், பிப்.28 - கடலூர் மாவட்டம், வீராணம் ஏரி ரூ. 68 கோடியில் மேம்படுத்தும் பணி நடை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்தார். கொள்ளிடம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்  குமார்  செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறு கையில், சிதம்பரம், கொள்ளிடம் வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியானது 11 கி.மீ நீளமும், 4 கி.மீ அகலமும்,  47.50 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரி யின் மூலம் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், குமராட்சி வட்டங்களை சேர்ந்த 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி யாகவும், அதனைச் சுற்றி 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்ற வருகிறது.மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது என்றார். 1.22 டிஎம்சி கொள்ளளவு இந்த ஏரிக்கு, காவிரியின் கொள்ளி டத்தில் உள்ள கீழணையில் இருந்து வட வாறு வழியாகவும், பருவகால மழை மூல மாகவும், நீர் வரத்து இருக்கும். தற்போது இந்த ஏரிக்கான நீர்வரத்து வாய்க்கால்கள் அடர்ந்த முட்செடி களாகவும், புதர்களாகவும் உள்ளதால் நீர்வரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏரியை 1.22 டி.எம்.சி தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையில் 0.90 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கும் சூழ்நிலை உள்ளது.  மழைக்காலங்களில் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை, ஆண்டி பாளையம், வாய்க்கால் ஏரி மூலம் 30,000 கனஅடி நீர் வரத்து ஏற்படும். அவசர காலங்களில் 23,000 கன அடி  தண்ணீர் மட்டுமே வெளியேறும் நிலை உள்ளது. மழைக்காலத்தில் நீர்வரத்து அதி கரிப்பதாலும், வாய்க்கால்களில் தண்ணீர் வெளியேற்றும் அளவு குறைவாக இருப்பதாலும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு வீராணம் ஏரி பகுதிகளான வெள்ளி யங்கால் ஓடை, மண் வாய்க்கால், ஆகிய மூன்று பெரிய வாய்க்கால்களை தூர்வாரி, அகலப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி புனரமைப்பு மேற்கொள்ளும் வகையில் ரூ.63.50 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி யுள்ளார். இதன் மூலம் ஏரியில் உள்ள பழுதடைந்த பாசன வாய்க்கால்கள், மதகுகள் புனரமைக்கும் பணிகள், 7,500 கன அடி வெள்ள நீர் வெளியேற்றும் வகை யில் பூதங்குடி கிராமத்தில் உள்ள புதிய உபரிநீர் ஒழுங்கியத்தில் கூடுதலாக 5 நீர்ப்போக்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம வள நிதியிலிருந்து 4.6 கோடி மதிப்பீட்டில் வடவாற்றின் குறுக்கே ஒழுங்கியம் அமைத்து 11 பாசன மதகுகள் மூலம் 4,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் வெள்ள பாதிப்பு கள் குறைவதுடன் கூடுதலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆட்சி யர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரி வித்தார். இந்த ஆய்வின் போது, செயற்பொறி யாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் சிவராஜ், வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.