கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து வழங்காமல் உள்ள தினப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ். கண்ணுசாமி தலைமை தாங்கினார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். மனோகரன், மாவட்ட தலைவர் என்.காசிநாதன், போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ஜி. பாஸ்கரன், பொருளாளர் ஆர்.பழனிவேல் உள்ளிட்ட பலர் பேசினர். இதேபோல் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருப்பு கொடி போராட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் நாகராஜன், லட்சுமிநாராயணன், பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் பேசினர்.