சென்னை, மார்ச் 25- சென்னையில் போக்கு வரத்து காவலர்கள் மத்தியில் வெரிகோஸ் வெயின் என பிரபலமாக அறியப்படும் சுருள்சிரை பாதிப்பு அதிகமாக உள்ளது, இது குறித்து விழிப்பு ணர்வை உருவாக்கும் நோக்கத்தோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை யில் வாக்கத்தான் (நடை பயணம்) நடைபெற்றது. சனிக்கிழமை நடை பெற்ற இந்த பயணத்திற்கு ரேலா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மவுண்ட் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் இதனை தொடங்கி வைத்தார். சிரைகளில் உள்ள வால்வுகள் சரியாக செயல்படாததன் காரண மாக ஏற்படும் பாதிப்பு நிலையே சுருள் சிரை யாகும். இதயத்திற்கு ரத்தம் செல்வதற்கு பதிலாக கால்களிலேயே தேங்கும் பிரச்சனை இது வாகும். துடிக்க வைக்கும் வலி, கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம், பாதிப்புள்ள பகுதி களைச் சுற்றி அரிப்பு, சருமத்தின் மேற்புறத்தில் வெளிப்படையாகத் தென்படுகின்ற வீக்கம் அல்லது சுருண்டிருக்கும் சிரைகள் நரம்புகள் ஆகியவை சுருள் சிரை பாதிப்பு நிலையின் போது காணப்படும் பொது வான அறிகுறிகளாக இருக்கின்றன என்று மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். இளங்குமரன் கூறினார்.