districts

img

வாணியம்பாடி: 4 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா

ஆம்பூர், ஏப். 19- வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 4 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வாணியம்பாடி தீயணைப்பு நிலை யத்தில் பணிபுரியும் தலைமை தீயணைப்பாள ருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்  பட்டன. இதனையடுத்து அவர் வாணியம்பாடி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, பரிசோதிக்கப்பட்டார். அதில் அவ ருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலை யத்தில் அவருடன் பணிபுரியும் சக பணி யாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில்,  இரண்டு ஓட்டுனர்கள், ஒரு தீயணைப்பாளர் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்னர் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தீயணைப்பு நிலை யத்தை தூய்மைப்படுத்தினர். தற்போது திரு பத்தூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 500யை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;