திருவண்ணாமலை, நவ.21- வந்தவாசியில் ஆதார் அட்டை வழங்காமல் பழங்குடியின பெண்ணை அலைக்கழித்து வருவதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி தாலுகா பெரணமல்லூர் பகுதியில் பழங்குடியின பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்னுக்கு ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட எவ்வித ஆதாரங்களும் இல்லை. இதனால், காவல் நிலையத்தில் குற்றப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதார் அட்டை கேட்டு வட்டாட்சி வட்டாட்சியரிடம் அந்த பெண் பலமுறை முறையிட்டும் வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா, யாசர் அராபத், வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்ட பெண் கலந்து கொண்டார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பொன்னுசாமி, இரண்டு நாட்களில் பெரணமல்லூர் பகுதி யில் ஆதார் முகாம் நடைபெற உள்ளதாக வும், அப்போது ஆதார் அட்டை வழங்குவ தாகவும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.