வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு சார்பில் திருநின்றவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் என்.நித்தியானந்தம், ராபர்ட் எபிநேசர் (கட்டுமான சங்கம்), பாரி (தமுஎகச) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருத்தணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணை நிர்வாகிகள் கரிமுல்லா, சுமதி, ஜெயவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பொன்னேரி அம்பேத்கர் சிலைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.பூபாலன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.