புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் நகராட்சி பஞ்சாயத்து கூட்டு போராட்டக்குழு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் பிரேமதாசன், ராதாகிருஷ்ணன்,ஆனந்த கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.