districts

img

தலித் விவசாயி மரணம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

திருவண்ணாமலை,ஜன.19- திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு மதுரா இருதயபுரம் பகுதியில் வசிப்பவர் பழனி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன், ரவி, சென்னம்மாள் ஆகி யோரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி இருந்துள்ளார்.  குடும்ப சூழ்நிலை காரணமாக வட்டி திரும்ப கட்ட முடியாத சூழ்நிலையில் தவித்து வந்த பழனிக்கு சொந்தமான 3 ஏக்கர் 42 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி கொண்டுள்ளனர். இதனால் விரக்தி யடைந்த பழனி, கடந்த டிசம்பர் 31 அன்று ராயப்பன் வீட்டின் முன்பு சென்று தீக்குளித்துள்ளார்.  பிறகு, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை.  இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் எஸ். ராமதாஸ், மாவட்டச் செயலாளர் ப.செல்வன் நிர்வாகிகள் முருகன், ஆரோக்கியமேரி ஆகியோர் பழனியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், இந்த சம்பவத்தில் குற்ற வாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்த பழனியின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.