districts

img

நகர்ப்புற வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் ஆணையரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19 - சென்னை மாநகராட்சிக் குட்பட்ட அனைத்து மண்ட லங்களிலும் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு (100 நாள் வேலை) திட்டத்தை, நகர்ப்புறங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அறிவித்தது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-1, 4வது வார்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், 123வது வார்டு உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் மனு அளித்த னர். அதில், மாநகராட்சிக்  குட்பட்ட அனைத்து மண்ட லங்களிலும் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சட்டம் - 2016ன்படி, இந்த திட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசும், மாற்றுத்திறனாளிகள் துறையும் வழங்கும் பரா மரிப்பு உதவித் தொகை யோடு, மாநகராட்சியும் கூடு தலாக ஒரு குறிப்பிட்டளவு தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.