ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் கழிப்பறை மூடிக் கிடக்கிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இயற்கை உபாதையை கழிப்பதற்கு பொதுவெளியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த கழிப்பறையை திறந்து தண்ணீர் வசதியுடன் செயல்பட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.