கள்ளக்குறிச்சி,ஜன.24 – உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் மன்னார்குடி பகுதி யில் 2ம் உலகப் போரின் போது ராணுவ விமானப்படை ஓடு தளம் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் விமானப்படை ஓடுதள பாதை பயன் பாடின்றி சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விமான படை ஓடுதள பாதை பயன் பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வரு கிறது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாண வர்கள் டிரோன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விவசாயப் பகுதியில் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்கு வசதியாக ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் பின் தங்கியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்ப தற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதற்கான ட்ரோன் பயிற்சியின் முன்னோட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவ எல்லைப் பகுதிகளை கண்காணிப் பதற்கு கண்காணிப்பு கேமராவுடன் கூடிய சிறிய ஆளில் லாத விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் ஊடுரு வலை தடுக்கவும், எதிரிகளின் நிலைகளை கண்காணிக்க ஏது வாக இருக்கும் வகையில் ஆளில்லா சிறிய விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.