districts

img

என்எல்சி நிறுவன பங்கு விற்பனை தொடர் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு

கடலூர், மார்ச் 12- என்எல்சி நிறுவனத்தின் 7 விழுக்காடு  பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு அறிவித்துள்ள முடி வுக்கு எதிராக அனைத்து தொழிற் சங்களும் இணைந்து தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி தொழிற்சங்கங் கள் அவசர ஆலோசனை கூட்டம் தொமுச  அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள என்எல்சி நிறு வனத்தின் 7 விழுக்காடு  பங்கு விற்பனைக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்றும் கடிதங்கள் அனுப்புவது, அனைத்து கட்சி மாநில தலை வர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மார்ச் 13 அன்று மீண்டும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தை நடத்தி தொடர் போராட்ட நடவடிக்கைகளை அறிவிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச்செய லாளர் பாரி, சிஐடியு தலைவர் டி.ஜெயராமன்,  பொதுச் செய லாளர் எஸ்.திருஅரசு, எல்எல்எப் பொதுச்செயலாளர் காசிநாதன், ஐஎன்டியுசி தலைவர் குமார், எம்எல்எப் தலைவர் சந்திர சேகரன், எச்எம்எஸ் பொதுச் செயலாளர்  சுரேஷ், டீடியூசி பொதுச்செயலாளர் வேலு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.