பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் முதல் அத்திப்பள்ளி வரை 4 கிலோ மீட்டர் சாலை உரிய பராமரிப்பு இல்லாததால் பாதாள சாக்கடைகள் பல இடங்களில் திறந்து கிடக்கின்றன. குறிப்பாக ஹில்ஸ் ஹோட்டலையொட்டியும், சுரங்கப்பாதை அருகிலும் ஆபத்தான நிலையில் திறந்துகிடக்கும் பாதாளசாக்கடையால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.