districts

img

அங்கீகாரமற்ற காப்பகங்கள்: விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம், பிப்.17- விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் காப்பகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பழனி எச்சரித்தார். விழுப்புரம் அருகே பாணாம்பட்டை அடுத்த கோணங்கி பாளையம் கிருபாலயா நலங்குன்றி யோர் நலவாழ்வு மையம், அசோக புரி வேலா மனவளர்ச்சி குன்றியோருக் கான இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆய்வு செய்தார். அப்போது, காப்பகம் நடத்துவ தற்கான அனுமதி, கட்டிட நிலைத்தன்மை, தீ தடுப்பு, மருத்துவச் சான்றுகள், தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர், குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த பதிவேடுகள், பணியாளர்கள் விவரம் பற்றிய பதிவேடு, உணவு வழங்கும் பட்டியல் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும சமையலறை, உண வருந்தும் இடம், கழிவறை, குடிநீர் வசதி, மைய வளாகம், பொருட்கள் வைப்பறை, உணவு தயாரிக்கும் பொருட்களின் தரம், சுகா தாரத்தன்மை, கண்காணிப்பு கேமரா, மருத்துவ முதலுதவி சிகிச்சை வசதி போன்றவற்றையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த அன்புஜோதி காப்பகத்தின் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் பிற காப்பங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் பாதுகாப்பு மைங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது”என்றார். இனி துறை சார்ந்த அலுவ லர்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு உரிய அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் காப்பகங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, உதவி ஆட்சி யர் (பயிற்சி) லாவண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.