districts

img

காது கேளாதோர், வாய் பேசாதோர் உரிமைக்கான சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை உதயம்

சென்னை, ஏப். 9- தமிழ்நாடு காதுகேளா தோர், வாய் பேசாதோர் உரிமைக்கான சென்னை மாவட்ட கிளை உதய மானது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சார்ந்த தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் உரிமைக்கான சென்னை மாவட்ட கிளை அமைப்புக் கூட்டம் அம்பத்தூரில் ஞாயிறன்று (ஏப். 9) நடைபெற்றது. இதில் மாநிலச் செய லாளர் பா.ஜான்சிராணி, வாய் பேசாதோர் சங்கத்தின் மாநில கிளைத் தலைவர்  பி.ஜீவா, மாநில பொரு ளாளர் வி.சுதா, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் வட சென்னை மாவட்ட தலை வர் ஜெய்சந்திரன், செய லாளர் எஸ்.ராணி, மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் எஸ்.மனோன்மணி, அம்பத்தூர் பகுதி ஒருங்கி ணைப்பாளர் ஜெ.ரவி ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகள் சென்னை மாவட்டத் தலைவராக ஷேக் முக்தார், பொதுச்செயலாளராக எஸ்.சகிலா அலி, பொருளா ளராக வரபிரசாத் ராவ், துணைத் தலைவர்களாக ரவி, சுதா, இணைச் செய லாளர்களாக வி.காயத்ரி, பெருமாள் உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.