சென்னை, அக். 26- பெண்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார், கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் திருவொற்றி யூரில் பெண்ணுரிமை மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் புதனன்று (அக். 25) நடைபெற்றது. பகுதிச் செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாசுகி பேசுகையில், பெண்களுக் கான வாக்குரிமையை உலகநாடு கள் முன்வராத போது, முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது சோசலிச சோவியத் யூனியன்தான். அதேபோல் கல்வி யில், வேலைவாய்ப்பில் என அனைத்து துறைகளிலும் பெண் களுக்கான வாய்ப்பை வழங்கிய தும் சோவியத் யூனியன் என்றார். ஆனாலும் பெண்கள் வெளியே வருவதில் சிக்கல் நீடித்தது. அது குறித்து சோசலிச அரசு உடனடியாக ஆராய்ந்த போது, பெண்களின் வீட்டு வேலைகள்தான் அதற்கு காரணம் என தெரியவந்தது. உடனே அரசு குழந்தை காப்பகம், மலிவு விலை உணவகம், மலிவு விலை சலவையகம் ஆகியவற்றை கொண்டு வந்தது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கேற்ற னர். அதன்மூலம் பெண்கள் முன்னேற்றமடைந்தனர். அது போன்ற சமூக அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காக போராடி வருகிறோம் என்றும் அவர் கூறினார். முன்பெல்லாம் மீன்பிடி தடை காலத்தின் போது, ஆண் மீனவர் களுக்கு மட்டும்தான் நிவாரணம் வழங்கப்பட்டது. பெண் மீனவர்க ளுக்கு நிவாரணம் கிடையாது. ஏன் என்று கேட்டால் மீன்பிடி தொழிலா ளர்கள் சொசைட்டியில் உறுப்பி னர்களாக இருப்பவர்களுத்தான் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்கள். பெண்கள் ஏன் உறுப்பினராக இல்லை என்று கேட்டால், பெண்கள் கடலில் போய் மீன் பிடிப்பதில்லை எனவே அவர்களை மீனவர்களாக கருத முடியாது எனக் கூறினார்கள். ஆண்கள் மீன் பிடித்து வந்தாலும், அதை கொண்டு சென்று விற்பனை செய்யும் பெண்களை எப்படி மீனவர்கள் இல்லை என்று கூறமுடி யும் என இடதுசாரி தொழிற்சங் கங்கள், பெண்கள் அமைப்புகள் போராடியதன் விளைவாக பெண்களும் சொசைட்டியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள், சிறுமிகள் மீதான தாக்கு தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச்சம்பவங் களில் பாஜக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்களே ஈடுபடுகிறார்கள். ஆனால் மோடியும், அமித்ஷாவும் அது குறித்தெல்லாம் பேசுவது கிடை யாது. மாறாக அந்த குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்படு கிறார்கள். அதற்கு காரணம் பெண்ணடிமைத்தனத்தை சித்தாந்தமாக கொண்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., பாஜக என்பதை மறந்து விடக்கூடாது.
1950ஆம் ஆண்டு அரசியல் சாசனம் கொண்டு வரும் போது, மநுநீதிதான் இந்துக் களுக்கான சட்டம் என ஆர்எஸ்எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் தலையங்கம் எழுதியது. வேதத் திற்கு அடுத்தபடியாக மநுஸ்மிருதி என்று சாவர்க்கர் கூறினார். ஒரு பெண் தந்தைக்கு, கணவனுக்கு, மகனுக்கு அடிமையாக இருக்க வேண்டும், கல்வி கற்கக் கூடாது, ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, சொத்துரிமை கூடாது என்று மநுஸ்மிருதி கூறுகிறது. இதைத் தான் இந்தியாவின் சட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சித்தாந்தம் கொண்ட பாஜக இன்னும் 5 ஆண்டு காலம் பதவியில் இருந்தால் இந்தியாவின் அடிப்படை அம்சங்களை தகர்த்து விடுவார்கள். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, அரசியல் சாசனத்தை, மாநில உரிமையை பாதுகாக்க சாதி, மதம், மொழி கடந்து அனைவரும் பாஜகவை, அவர்களின் சித்தாந்தத்தை வீழ்த்த முன்வர வேண்டும் என்று உ.வாசுகி அறைகூவல் விடுத்தார். பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ெஜயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, எஸ்.ராணி, ஆர்.லோகநாதன், அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெ.ரவிக்குமார், டி.பாபு, எஸ்.பவானி ஆகியோரும் பேசினர். முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங் கடைய்யா நன்றி கூறினார்.