districts

img

நெய்வேலியில் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா

கடலூர், ஜூலை 30- என்எல்சி இந்தியா நிறுவன கல்வி துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்துடன் இணைந்து கிழக்கு மண்டல துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை நெய்வேலியில் நடத்தியது. அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் திறனறிதல் தேர்வில் கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளி குழந்தைகள் 25 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  காகிதக் கலை செயல்பாடுகள் குறித்து மாநில கருத்தாளர் எஸ்.பொன்முடி, அறிவியல் விந்தைகள் குறித்து  ராஜேந்திரன், எளிய அறிவியல் பரிசோதனைகள் குறித்து வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜெயபிரகதி, பிரியா ஆகியோர் உரையாற்றினர். வானவில் தொலைநோக்கி நிகழ்ச்சியை வானவில் மன்ற கருத்தாளர் லலிதா, மகிழ்ச்சியாக கற்றல் நிகழ்ச்சியை கருத்தாளர் எஸ். பாலகுருநாதன் மாணவர்கள் - உடல் நலம் குறித்து மருத்துவர் அ.செந்தில் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.ஸ்டீபன் நாதன், மாவட்ட செயலாளர்கள் பரமேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். ‘கழிவு மேலாண்மை’என்ற தலைப்பில் சென்னை சவீதா மருத்துவ  பல்கலைக்கழக விஞ்ஞானி  வி. அசோக்குமார் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணை பொது மேலாளர் எம். பிரபாகரன், என்எல்சி மின்னியல் துறை துணைப் பொது மேலாளர் பி.ஜெயந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசளித்தனர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர்  பூர்வ சந்திரன் வரவேற்றார். நெய்வேலி நகரச் செயலாளர் கொளஞ்சியப்பன் நன்றி கூறினார்.