காசநோய் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை, ஜன. 27- பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 8, கோட்டம் 100இல்காசநோய் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிபி சத்திரம் பிரதான சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாமன்ற உறுப்பினர் வசந்தி பரமசிவம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள், அலுவலர்கள், காசநோய் ஒழிப்புத்துறை பணியாளர்கள், அலுவலர்கள், பள்ளிக் குழந்தைகள் பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இறுதியில் காசநோய் இல்லாத தமிழ்நாடு குறித்து நடைபெற்ற கையெழுத்து பிரச்சாரத்தில் ஏராளமானோர் கையெழுத்திட்டனர். விழிப்புணர்வு மனித சங்கிலி டிபி சத்திரம் பிரதான சாலையில் உறுதிமொழியுடன் நடைபெற்றது.
குறுகிய பாதையில் கணினி பதிவேற்றம் அறை: மக்கள் அவதி
ராணிப்பேட்டை, ஜன. 27 – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் கோரிக்கைகளாக சுமார் 300 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் எல் சி. மணி திங்களன்று (ஜன. 27) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அம்மனுவில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என ஏராளமானோர் தங்கள் கோரிக்கை மனுக்களை ஒப்புகை சீட்டு வழங்கும் இடத்தில் கணினியில் பதிவேற்றம் செய்ய குறுகிய இடத்தில் சென்று சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைத்து, விரிவுபடுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள்
ராணிப்பேட்டை,ஜன.27- ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 76வது குடியரசு தினம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து திறந்தவெளி வாகனத்தில் சென்று காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், பணி யாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 340 நபர்க ளுக்கு பாராட்டு சான்றி தழ்களையும், காவல்துறை யில் முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை 27 காவலர்களுக்கும் ஆட்சியர் வழங்கி கவுர வித்தார்.