districts

img

பள்ளிக்கல்வி துறை கலைத்திருவிழாவுக்கு பயணம்...

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொள்வதற்காக வியாழனன்று (ஜன. 2) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இரண்டு பேருந்துகளில் புறப்பட்டனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வழியனுப்பி வைத்தார்.  முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் விஜயகுமார் (இடைநிலை), பிரேமலதா (தொடக்கக் கல்வி), மோகன் (தனியார் பள்ளிகள்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.