அக்.12 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
தஞ்சாவூர், அக்.2- தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, அக்டோபர் 12 ஆம் தேதி, தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கும். தஞ்சாவூர் மாவட்ட கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயி லாக பள்ளிக்கு ஒருவர் வீதம் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றும் போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவையல்லாமல் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள், அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொரு வருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப் படும். பள்ளி மாணவர்களுக்கு - அண்ணலின் அடிச்சு வட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசம் என்று பெயர் சொல்வோம் என்ற 4 தலைப் புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு - வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை என்ற 6 தலைப் புகளில் பேச தயாராக வர வேண்டும். இந்த தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பினை போட்டியின் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பேச வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் அண்ணா அரசு கல்லூரியில் முதியோர் தின விழா
மயிலாடுதுறை, அக்.2 - புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக முதி யோர் தினம் கொண்டாடப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. அதன்படி அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலக முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர் பாது காப்பை வலியுறுத்தி ஹெல்ப் ஏஜ் இந்தியா, தேசிய இலவச முதியோர் உதவி எண்.14567, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, சமூகப்பணி துறையுடன் இணைந்து முதியோர் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து பிரச்சாரத்தை நடத்தினர். நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் முதியோர் பாது காப்பின் அவசியம் குறித்தும், பெற்றோர், முதியோர் பாது காப்பு சட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார். பின்னர் அவர் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். வியாசராயர் தலைமை வகித் தார். சமூகப்பணி துறைத்தலைவர் முனைவர் சிவ குமார், பொதுப்பணித்துறை தலைவர் முனைவர் ஆசாத், தேசிய ஊரக வளர்ச்சித்துறை, பணியாளர் ரந்தீர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முதியோரின் பாதுகாப்பு, பராமரிப்பு, ஆற்றுப்படுத் துதல், ஆதரவற்ற முதியோர்களை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்ப்பது, அவர்களின் குடும்பத்துடன் இணைத் தல் மற்றும் சட்ட ஆலோசனை வழங்கும் உதவிகளுக்கு 14567 என்ற தேசிய இலவச தொலைபேசி எண், மத்திய நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, புதுச்சேரி சமூக நலத்துறையுடன் இணைந்து ஹெல்ஏஜ் இந்தியா அமைப்பின் மூலம் செயல்பட்டு வருகிறது. முதியோர் உதவி எண்ணை அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டது.
வாலிபர் கைது
அரியலூர், அக்.2- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருபவர் சூரியபிரகாஷ் (23). இவர் கேரளாவில் பைப் பிட்டிங் வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமி ஒருவரிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சுமதி, சூரியபிரகாஷ் மீது வழக்குப் பதிந்து, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.