districts

img

வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி

வெண்மணி  தியாகிகள் நினைவுதினமான டிசம்பர் 25 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் சிபிஎம் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாகோடு பேரூராட்சி தலைவரும் மேல்புறம் சிபிஎம் வட்டாரச் செயலாளருமான ஆர். ஜெயராஜ், மஞ்சாலுமூடு ஊராட்சி துணைத் தலைவரும் களியல் வட்டார செயலாளருமான பி.சசிகுமார், உறுப்பினர்கள் பி.சிங்காரன்,ஹச்.இராஜதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் வெண்மணி தியாகிகள் தின அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குலசேகரம் வட்டார செயலாளர் கே. செல்வராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் குலசேகரம் வட்டார செயலாளர் பி. விஸ்வம்பரன். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ரவி ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் விவசாயதொழிலாளர் சங்கத்தின் வட்டார செயலாளர் ஸ்ரீ குமார்,  கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் இராஜ்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சதீஷ், செல்லப்பன், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வெண்மணி தியாகிகள் தினம் மற்றும் தோழர் அந்தோனி நினைவு தினத்தை முன்னிட்டு ஈத்தாமொழியில் ஞாயிறன்று அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சிஐடியு ஒன்றிய கன்வீனர் எஸ்.டி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என். முருகேசன் துவக்கி வைத்தார்.  ஆட்டோ சங்க தலைவர் சிவகோபன் , விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் மிக்கேல் நாயகி, தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தென்காசி மாவட்டம் தேவிபட்டினத் தில் வெண்மணி தியாகிகள் தினம் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது .மூத்த தோழர் பி.ஜெயராஜ் புஸ்பம், பூல்பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சக்திவேல் ஒன்றியக்குழு சிவசுப்பிரமணி உட்பட பலர்கலந்து கொண்டனர்.