சிபிஎம் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனனின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று (ஆக.8) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அனகாபுத்தூரில் உள்ள அவரது நினைவு கல்வெட்டு முன்பு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி. பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் தாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.