districts

img

என்.சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி கூட்டம்

கள்ளக்குறிச்சி, நவ.26- கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மகத்தான தோழர் என். சங்கரய்யா மறைவையொட்டி கள்ளக்குறிச்சியில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குண சேகரன், மாநில எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, என்.சங்கரய்யாவின் சுதந்திரப்போராட்ட வரலாறு, அரசியல் மற்றும் சமூக வாழ்வு குறித்து பேசினர். மாவட்டச் செயலாளர்கள் இரா.மதியழகன், கு.அறிவுக்கரசு (விசிக), டி.கலியமூர்த்தி (சிபிஐ-எம்எல்), கே. ராமசாமி (சிபிஐ) ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஆனந்தன். டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், எம்.செந்தில், இ.அல மேலு, வி. ஏழுமலை, எம்.கே.பழனி ஒன்றிய செயலாளர்கள் கே.வேலாயுதம், டி.மாரி முத்து, கே.அண்ணாமலை, எஸ்.சிவாஜி, வி.பழனி எம்.ஏழுமலை, பி.ரகு ராமன், பி.சேகர், டி.எஸ்.மோகன், ஜெ.ஜெயக் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.