districts

img

வலது பக்க இதயம் பாதித்த 32 வயது பெண்ணுக்கு சிகிச்சை

சென்னை, ஆக.7-   ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த  32 வயது பெண்ணுக்கு வலது பக்க இதய  பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமான  நுரையீரலுக்கு செல்லும் நரம்பை செய லிழக்கச் செய்து இந்தியாவில் முதல் முறை யாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளெ னேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை செய்து சாதனை படைத்துள்ளது.  இம்மருத்துவமனையின் மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் குரு பிரசாத்  சோகுனுரு தலைமையிலான மருத்துவர் குழு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது. இந்த நரம்பு செயலிப்பு சிகிச்சை யானது நுரையீரல் மாற்று அறுவை சிகிச் சையை கைவிட நோயாளிக்கு உதவியது.  நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் இதய  செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. வலது பக்க இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தின் ஒரு பொதுவான விளைவாகும். இதயத்தின் வலது பக்கம் திறம்பட பம்ப் செய்ய முடியாதபோது இது ஏற்படுகிறது, மேலும் ரத்தம் ஒரே இடத்தில் சேர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மருத்துவர்கள் நோயாளி யின் நுரையீரலில் உள்ள உயர் ரத்த  அழுத்தத்திற்கு பங்களிக்கும் பாதிக்கப்பட்ட  நரம்புகளை கண்டறிந்து அவற்றை செயலி ழக்கச் செய்தனர். இந்த வெற்றிகரமான சிகிச்சை, இந்தியாவில் நுரையீரல் உயர்  ரத்த அழுத்த சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையை குறிக்கிறது என்று  சென்னை யின் மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு  கூறினார்.