15வது ஊதிய குழு பேச்சு வார்த்தையை தமிழ்நாடு அரசு இறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் வேலூர் மண்டல அலுவலகம் முன்பு ஜூன் 24ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் பணிமனையில் கிளைத் தலைவர் ஏ.பூபதி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் எஸ்.சுரேஷ், திருப்பத்தூர் நகர சிஐடியு அமைப்பாளர் சி.கேசவன், போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல மத்திய சங்க இணை செயலாளர் முகுந்தன்,திருப்பத்தூர் பணிமனை செயலாளர் பெருமாள் மற்றும் எஸ்.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.