திருவள்ளூர், ஜன 9- தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் விழுப்புரம் கோட்ட சிஐடியு, காஞ்சி மண்டல துணைத் தலைவர் எஸ்.மாயகண்ணன், இணைச் செயலாளர் என்.குணசேகரன், பணி மனை செயலாளர் என்.யு.கோபி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் ஆகி யோர் பேசினர்.