திருபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற சிஐடியு தலைவர் அ.சவுந்தர ராசன் உள்ளிட்ட 600 பேரை காவல்துறை அராஜகமாக கைது செய்தது. இதனை கண்டித்து புதனன்று (அக்.9) பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலா ளர் கே.திருச்செல்வன், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர், இதனை தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.