districts

img

ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு

சென்னை, பிப். 21 - ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணை 322ஐ எரித்தும் செவ்வாயன்று (பிப்.21)   சென்னை பல்ல வன் இல்லம் முன்பு போக்கு வரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒப்பந்த (அவுட்சோர்ஸ்) முறையில் ஒட்டுநர்களை நியமிக்கக் கூடாது, ஒர்க் ஷாப் பணிகளுக்கு, பணி ஓய்வுபெறக் கூடிய நிலையில் உள்ள ஓட்டு நர்களை பயன்படுத்த வேண்டும், காலிப் பணி யிடங்களை நிரப்ப தடை யாக உள்ள அர சாணை 322ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி யாளர்களிடம் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 433 பேருந்துகள் இயங்க வேண்டும். ஆனால் 2800 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 633 பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை. இந்த பேருந்து களை இயக்க சுமார் 2 ஆயிரம் ஊழியர்களை நிய மிக்க வேண்டும். அதற்கு தடையாக 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 322 உள்ளது.

எனவே, இந்த அர சாணையை ரத்து செய்ய வேண்டும். காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பேருந்துகள் இயக்கப் படுகிறது. ஒட்ட மொத்தமாக பேருந்துகள் பணிமனைக்கு செல்லும்போது அவற்றிற்கு எரிபொருட்களை நிரப்பி, நிறுத்துவது, பணி தடபழுது சரி பார்ப்பது, லாரிகளை இயக்குவது போன்ற பணி மனை சார்ந்த (ஒர்க் ஷாப்) பணிகளுக்கும் ஓட்டு னர்களையே நிர்வாகம் பயன்படுத்துகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள 532 ஓட்டு நர்களை அவுட்சோர்ஸ் முறையில் 22 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில்  நியமிக்க உள்ளது. இதனை  கைவிட வேண்டும்.  இந்த ஒர்க் ஷாப் பணிகளுக்கு பணி ஓய்வு பெறக்கூடிய நிலை யில் உள்ள ஓட்டுனர் களை பணிமூப்பு அடிப்படை யில் பயன்படுத்த வேண்டும். அரசாணை 322ஐ ரத்து செய்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அந்த அரசாணை திமுக ஆட்சியிலும் தொடர்வது ஏற்புடையதல்ல. ஆகவே, அரசாணையை எரித்து போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கி னார். சம்மேளன துணைத் தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, துணை பொதுச்செயலாளர்கள் சிவா, ரவிசங்கர் உள்ளிட்டோர் பேசினர். இந்த நகல் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ கம் முழுவதும் உள்ள பணி மனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.