districts

சென்னை முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  5 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம், ஜூலை 1 - காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் பணி அமைப்பில் பணியிட மாறுதல் மற்றும் கூடுதல் பொறுப்பு நியமனம் செய்து உத்தரவிடுவதாக சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய தனி வட்டாட்சியர் சத்யா - காஞ்சிபுரம் வட்டாட்சியராகவும் , உத்திரமேரூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கருணாகரன் வாலாஜாபாத் வட்டாட்சியராகவும் , வாலாஜாபாத் வட்டாட்சியராக பணிபுரிந்த சதீஷ் திருப்பெரும்புதூர் வட்டாட்சியராகவும், வாலாஜாபாத் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய மலர்விழி குன்றத்தூர் வட்டாட்சியராகவும் , உத்திரமேரூர் வட்டாட்சியராக தேன்மொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்

புவனகிரி   அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட  5 திருடர்கள்

சிதம்பரம், ஜூலை1  புவனகிரி அருகே கீழ்மணக்குடி கிராமத்தில்  சனிக்கிழமையன்று அதிகாலை 5 திருடர்கள் ஆயுதங்களுடன்  அந்த பகுதியில் உள்ள 2 வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவர்கள் பதிவாகினர்.   இந்த நிலையில்  அவர்கள் 5 பேரும்  சனிக்கிழமை காலையில்  அந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் அங்கிருந்த 5 பேரை பார்த்ததும் திருட வந்து தன் வீட்டின் கோமராவில் பதிவான உருவம் போல இருக்கிறது என்று அதிர்ச்சியடைந்தார். பின்னர் கிராமமக்களை  வரவழைத்து 5 பேரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொழிற்கல்வி பயில  விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணிப்பேட்டை, ஜுலை1- ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளில் ஜூன் 2024 -க்கான சேர்க்கை, Electrician, Fitter, Mechanic Motor Vehicle, Painter (General), Wireman, Welder, Operator Advanced Machine Tools (OAMT) ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 100 % சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு ஜூலை1 முதல் ஜூலை 15 வரை நேரடி சேர்க்கை மூலமாக நிரப்பப்பட உள்ளது. நேரடி சேர்க்கை விண்ணப்பிக்க தொழிற் பயிற்சி நிலை யத்திலேயே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இத்தொழிற் பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மற்றும் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 14 வயது முதல் 40 வயது வரையிலும், பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. மேலும் விவரங்கள் அறிய 93809 73026, 90475 24325, 94990 55682, 9445269516 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ச.வளர்மதி தெரி வித்துள்ளார்.

ஒடிசா தம்பதி கைது

சென்னை, ஜூலை 1- சென்னை பல்லாவரம் அருகே சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தே கத்திற்கு இடமளிக்கும் வகையில் தம்பதி நின்று கொண்டி ருந்துள்ளனர். அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம் ஹான்ஸ் (30), பிரதிமா (29) என தெரியவந்துள்ளது. அவர்களை சோதனையிட்டபோது உயர்ரக கஞ்சா பொட்ட லங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு புதுச்சேரி, ஜூலை 1- ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நிதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி  ஒன்றிய பாஜக அரசு அனைத்து மாநிலங்களிலும் 3 புதிய குற்றவியல்  நடைமுறை சட்டத்தை  ஜூலை 1 முதல் அமல்படுத்த உத்தர விட்டுள்ளது. மக்களவையில் விவாதம் நடைபெறாமல் கொண்டு வந்துள்ள இச்சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் நிதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால், ஒட்டுமொத்த நீதிமன்ற பணிகளும் திங்கள்கிழமை முழுவதும்  பாதிக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி வெளியீடு இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில், 3 புதிய  குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதற்கான கையேடு வெளியிடும் விழா,  கதிர்காமத்தில் திங்களன்று  நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து  கொண்டு அச்சட்டங்கள் குறித்து கையேட்டை வெளியிட்டார். விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தலைமை செயலாளர் சரத் சௌகான், காவல்துறை,சிறைத்துறை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.