districts

சென்னை முக்கிய செய்திகள்

காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,அக்.2- தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:- திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமிக்கப்பட்டுள்ளார். பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினமும் தாம்பரம் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகரும் நியமிக்கப்பட் டுள்ளார்.

நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவால் பாதிப்பு: வர்த்தர்க புகார் 

 கடலூர், அக்.2 –  கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த நெல்லிக்குப்பம் வர்த்தகர்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். நெல்லிக்குப்பம் பகுதியில் ஈஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை,  தற்போது பழக்கத்தை விட  அதிகப்படியாக சாம்பல் துகள்கள் காற்றில் கலப்பதால் காற்று, தண்ணீர்  மாசுபடுகிறது, மற்றும் சுகாதார சீர்கேடு களால்  பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நெல்லிக்குப்பம் வர்த்தகர்கள்  சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் வணிகர்களை  திரட்டி கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

காலமானார்

 விழுப்புரம்,அக்.2- சிபிஎம் விழுப்புரம் மாவட்டக்குழு உறுப்பின ரும் மாவட்ட அலுவலகச் செயலாளருமான  கு.வீர மணியின் தாயார், குப்பு சாமி மனைவி அன்னக்கிளி (வயது 67),  புதனன்று கால மானார். அவரது இறுதிச் நிகழ்ச்சி புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பி.எஸ்.பாளையம் கிராமத்தில்  வியாழனன்று நடைபெறும்.கே.வீரமணியின் குடும்பத் தாருக்கு சிபிஎம்  விழுப்புரம் மாவட்ட குழு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொண்டுள்ளது.

விவோவின்  புதிய வரவு

சென்னை, அக்.2-  விவோ, அதன் வெற்றி கரமான வி40 மாடல் வரிசை யில் சமீபத்திய வரவாக வி40இ என்னும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தி உள்ளது.  5500எம்ஏஎச் பேட்டரி பிரிவில் இந்தியாவின் மிக வும் மெல்லிய மாடல் ஸ்மார்ட்போன் இதுவாகும். பல்வேறு சிறப்பு அம்சங் களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சலுகைகளுடன் அக்டோபர் 2 முதல் விற்பனைக்கு வரு கிறது. விவோவின் வி மாடல்  ஸ்மார்ட்போன்கள் சிறந்த நிழற்பட அனுபவத்திற் கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.