சென்னை, ஆக.18- சென்னை தாம்பரம் ரயில் நிலை யம் 3-வது ரயில் முனையமாக உரு வாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட பிறகு தாம்பரம் சென்னையின் பிரதான ரயில் முனையமாக மாறியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்துக்கு தினமும் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரயில் நிலையத்தில் கூடுதல் நடை மேடைகள் அமைக்கப்பட்டு, விரி வாக்கம் செய்யப்பட்டது. இங்கிருந்து நாகர்கோவில், செங்கோட்டை, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது 8 நடை மேடைகள் உள்ளன. முதல் இரு நடைமேடைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில்களை இயக்கவும், 3, 4-வது நடைமேடைகள் செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள நடைமேடைகள் விரைவு மற்றும் சரக்கு ரயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களின் தேவையை கருத்தில் கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடை மேடைகள் மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தாம்பரம் ரயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம்-பல்லாவரம் இடையே பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி கள் முடிவடைந்ததால் திங்கட் கிழமை முதல் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில்கள் வழக்கம்போல் இயக்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம் ரயில்வே பணிமனை மற்றும் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன. தாம்பரம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் 10 முதல் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப் பட்டு வந்த நிலையில், தற்போது 35 கி.மீ. வேகத்தில் இயக்க அனு மதிக்கப்படும். இதுதவிர கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வாரங்களாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஆக15 முதல் 18வரை வரை ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்கவில்லை. இந்த நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து திங்கள் முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.