மெட்ரோ ரயில் பணிகள் துவக்கம் தி.நகரில் போக்குவரத்து நெரிசல்
சென்னை,நவ.15- தியாகராயநகர் பனகல் பூங்கா-நந்தனம் சிக்னல் இடையே மெட்ரோ ரயில் பணிகள் தற்போது தொடங்கி உள்ள தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் சனிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் அதற்கேற்ப பழகிக்கொள்வதற்காக ஒரு வாரம் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர். தண்டபாணி தெரு, நந்தனம்-பனகல் பூங்கா வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தால் வெங்கடநாராயணா ரோடு, தியாகராயரோடு, பிரகாசம் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையை கடக்க வழக்கமான நேரத்தைவிட கூடு தலாக 20 முதல் 30 நிமிடம் வரை ஆகிறது. தியாகராய ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்தவும், பொதுமக்களை ஏற்றி, இறக்கிவிட்டு செல்லவும் அங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கனரா ரோபெகோ மியூச்சுவல் பண்ட் அறிமுகம்
மும்பை, நவ. 15 கனரா ரோபெகோ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய ‘கனரா ரொபெகோ மிட் கேப் பண்ட்’ என்ற புதிய நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பங்குகள் விற்பனை கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 25–ந்தேதி வெள்ளிக்கிழமை வரை முடிவடைய உள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை இந்நிறுவனம் ஐந்தாண்டுகள் மற்றும் அதற்கும் மேலான நீண்ட காலத்திற்கு மூலதன மதிப்பை உரு வாக்கும் நோக்கத்துடன், நடுத்தர முதலீட்டு நிறுவனங்க ளில் முதலீடு செய்ய உள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ரஜ்னிஷ் நருலா தெரிவித்துள்ளார். இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் 5 ஆண்டு கள் வரை பொறுமையாக இருக்கும்பட்சத்தில், சந்தை ஏற்ற இறக்கத்தை பொறுத்து சிறப்பானதொரு பலனை பெறு வார்கள் என்று அவர் ஒரு செய்திக்குறிப்பில் கூறி யுள்ளார்.
சென்னையில் டாக்சி பயணத்திற்கு மேலும் ஒரு செயலி அறிமுகம்
சென்னை, நவ.15- சர்வதேச பயண பகிர்வு சேவை தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டிரைவ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்நிறு வனத்தின் செயலியானது முன்பே வடிவமைக்கப்பட்ட கட்டணங்களைக் கொண்ட செயலி போலில்லாமல் பயணி களுக்கும் ஓட்டுநருக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகளையும் இன்டிரைவ் மேம்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் தாங்கள் விரும்பும் ஓட்டுநரை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. அதேபோல் ஓட்டுநர்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கக் கூடிய மற்றும் அவர்கள் விரும்பும் பயணங்களைத் தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது என்று இன்டிரைவர் நிறு வனத்தின் தெற்கு ஆசியாவிற்கான செய்தி தொடர்பு மேலாளர் பவித் நந்தா ஆனந்த் கூறியுள்ளார். மேலும் நெரிசல் மிக்க நேரங்க ளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
லாரி மோதி காவலர் பலி
போரூர், நவ.15- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ெஜய்னுல்லா புதின் (28). இவர் தாம்பரம் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்தார். ஜெய்னுல்லா, மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் காவல் நிலையம் அரு கில் உள்ள ரேசன்கடை சிக்னலில் நின்று கொண்டி ருந்த போது பின்னால் வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி ெஜய்னுல்லாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலியல் வன்கொடுமை
சென்னை,நவ.15- சென்னை மதுரவாய லில் 11ம் வகுப்பு மாண வியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
டோல்கேட் அருகே உலா வந்த காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி, நவ. 15- கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப் பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. மேலும் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் யானையை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற னர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அடர்ந்த வனப்பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த 3 யானைகளும் பையனப்பள்ளி அடுத்த ஜாகிர்மோட்டூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ரவியை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே அந்த 3 யானைகள் நின்று கொண்டிருந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் விரட்டினர்.
ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் நவ. 18 வரை மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி, நவ. 15- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இயங்கி வரும் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இளம் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்பில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவியல், புள்ளி யில் பாட பிரிவிலும், வணிகவியல் படித்தவர்கள் மட்டுமே இளம் வணிகவியல்(பி. காம்.) பாடப்பிரிவிலும், பொருளியல் படித்தவர்கள் மட்டுமே எக்கனாமிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர முடியும் என கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி, நவ. 15- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பிரிவிடை யாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கார்த்தி (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கார்த்திக் பைக் மீது மோதியது. இதில் கார்த்தி மற்றும் எதிரே பைக்கில் வந்த காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இதில் கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சிபிராஜ் சென்னை மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்
ஆரணி, நவ. 15- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பான்மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யபடுவதாக மாவட்ட கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆரணி அருகே முள்ளண்டி ரம் கிராமத்தை சேர்ந்த மரகதம்மாள் என்பவரின் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 140 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, எங்கிருந்து போதைப் பொருட்கள் வாங்கப்பட்டது என மரகதம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் பிஎஸ்என்எல் சிறப்பு விற்பனை முகாம்
புதுச்சேரி, நவ. 15- புதுவை பிஎஸ்என்எல் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருடன் இணைந்து, புதன்கிழமை (நவ. 16) முதல் சனிக்கிழமை (நவ. 19) வரை 4 நாட்கள் சிறப்பு விற்பனை முகாமை புதுவை தலைமை அலுவலகம், வில்லியனூர் தொலைபேசி நிலையங்களில் நடத்துகிறது. முகாமில் இலவசமாக புதிய ப்ரீபெய்டு சிம்கார்டு, நெட்வொர்க் மாற்றுதல் சேவை வழங்கப்பட உள்ளது. முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும். இதில் 45 நாட்கள் இலவசமாக பேசலாம். தினசரி 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இலவசம். இந்தத் தகவலை பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
வேலூர்,நவ.15- காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் நவ.15 முதல் வருகிற 30 ஆம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் அக்னிவீர் ஆண், அக்னிவீர் பெண் (ராணுவ காவல் பணி) சிப்பாய் தொழில்நுட்பம், உதவி நர்சு, உதவி நர்சு (கால்நடை) போன்ற பணி யிடங்களுக்கு ராணுவ ஆட்கள் தேர்வு நடக்கிறது. நேரடி சேர்க்கையின் போது, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளபடி அனைத்து ஆவணங் களையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் எந்தவிதமான தனி நபர் அல்லது முகவர்களை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத் தில் நேரில் சென்று சுயமான காவல் சான்று பெற்று வந்தால் மட்டுமே அனு மதிக்கப்படுகின்றனர்.