districts

தாசப்பிரகாஷ் அருகில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, செப்.9-  மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் மேற்கொள்வதால் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தாசப்பிரகாஷ் பகுதி யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அறி வித்துள்ளது.  ஈ.வே.ரா சாலையில் சென்ட்ரலிருந்து தாசப்பிரகாஷ் சந்திப்பை நே?க்கி செல்லும் திசையில், ஈ.வே.ரா சாலையில் வேனல்ஸ் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறை யினர் சாலையை ஆக்கிரமித்து வரும் 10ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 10 மணி முதல் 12ம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை, பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், போக்கு வரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. ஈ.வே.ரா சாலையில் தாசப்பிரகாஷ் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நே?க்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம். ஈ.வே.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசப் பிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாக னங்கள் ஈ.வே.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம், வலது புறம் திரும்பி காந்தி இர்வின் சாலை, உடுப்பி பாயிண்ட், வலது புறம் திரும்பி நாயர் மேம்பாலம் மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;