districts

img

மக்களை தேடி இயன்முறை மருத்துவம் 14 கிராமங்களில் மருத்துவ முகாம்

சென்னை,நவ.22 சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி   இயன்முறை மருத்துவ கல்லூரி ,மக்களுக்கு  அருகினில் மருத்துவத்தை கொண்டு செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் “மக்களை தேடி இயன்முறை மருத்துவம்” என்ற பெயரில் கல்லூரி முதல்வர் பேராசிரி யர் ர. பார்தசாரதி’ வழிகாட்டுதலில் பேராசிரி யர்கள் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு பல மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.  இணை பேராசிரியர் ஹரிஹர சுப்ரமண்யன்’ தலைமையிலான 8 பேர் கொண்ட குழு  14 நாட்களில் 14 கிராமங்க ளில்  இயன்முறை முகாம் நடத்தினர். தஞ்சா வூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் இலவச முகாம் நடை பெற்றது. தற்போது சென்னையிலும் வெற்றி கரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்கள் வலிகளுக்கு அவர்களே பயிற்சி கள் செய்யலாம். இதற்கான செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு  பிரசு ரங்கள் தரப்பட்டுள்ளது . இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து  கொண்டு பயனடையுமாறு கல்லூரி தாளா ளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.