வியாபாரிகளிடம் அராஜகமாக குப்பை வரி வசூலிக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியை கண்டித்து வெள்ளியன்று (டிச.27) பெருங்குடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கந்தன்சாவடி பெருங்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் இ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.