districts

img

தேர்தல் முடிந்தவுடன் விதிமுறைகளை தளர்த்த வணிகர் பேரமைப்பு கோரிக்கை

சென்னை, ஏப். 18- தமிழ்நாட்டில் தேர்தல்  முடிந்தவுடன் விதிமுறை களை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில  தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தனர்.   அந்த மனுவில், தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  தேர்தல் முடிவடைந்த பிறகும், ஜுன் 4ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள்  பிரதிநிதித்துவ சட்ட வழி காட்டுதலின்படி வாக்களிப் பும், பணியாளர்களுக் கான ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், வணிக நிறுவனங்கள் அவசியம் பின்பற்றி வருகின்றன. கடைகளுக்கு விடுமுறை அளித்து ஜனநாயக உரிமை யான வாக்களிப்பது எங்களின் கடமை. மேலும்  வணிகர்கள்  ஓட்டு விற்ப னைக்கு அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம். சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் குடும்பத் தோடு இணைந்த வணிக நிறுவனங்கள் வாக்களித்த பின்னர் அன்றைய தினம்,  கடையை திறந்து நடத்துவ தற்கு அனுமதி அளிக்க வேண்டும்.   மேலும் தேர்தல் முடிந்த பிறகும் ஜுன் 4ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தில் இருக்கு மானால் வணிகர்களும், வணிகமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். தொடர்ந்து 2 மாத கால நெருக்கடியை வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும், விவசாயி களுக்கும் அளிப்பது இயற்கை நீதிக்கு முரணான தாகும். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் தளர்த்தி மாநில எல்லையில் மட்டுமே அமலாக்கம் செய்வதுதான் நியாயமானதாக இருக்கும் என்பதையும் தலைமை தேர்தல் அதிகாரி கவனத் தில் கொண்டு, வணிகர்கள்,  பொதுமக்கள், விவசாயி களுக்கு சாதகமான தீர்வுக்கு வழிவகை செய்திடு மாறு பேரமைப்பு வலியுறுத்துகின்றது. அகில இந்திய தேர்தல்  ஆணையரிடம் வணிகர்  பேரமைப்பின் கோரிக்கை யையும், அதில் உள்ள   நியாயத்தையும் எடுத்துக் கூறி, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.