வேலூர், ஜூலை 22-
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்பு நான்கையும் கைவிட வேண்டும், புதிய மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கான்ட்ராக்ட் முறையை ஒழித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம், சுமைப்பணி, ஆட்டோ, சாலையோர வியா பாரம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும், நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி சென்னையில் நடை பெறும் பெருந்திரள் இயக்கம் விளக்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலூர் மண்டி வீதியில் கருத்தரங்கம் நடைபெற்றது எம்.காசி, எம்.பி.ராமச்சந்திரன் (சிஐடியு), கே.ஆர்.சுப்பிரமணியன், என்.பாலகிருஷ்ணன் (தொமுச), ஏ.எஸ்.சங்கர் மேஸ்திரி, ஆதி மூலம் (ஏஐடியுசி), எம்.ஏகாம்பரம், பி. சுந்தரம் (ஐஎன்டியுசி), பி.சரவணன் கா.வெ.திருப்பதி (எச்எம்எஸ்), ஏ.ஏழுமலை, எஸ்.ஏ.சிம்புதேவன் (ஏஐசிசிடியு) கலந்து கொண்டனர்.