districts

img

மாமல்லபுரத்தில் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி

செங்கல்பட்டு,நவ.22- மாமல்லபுரம் பகுதிகளில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மாடுகள்  சுற்றி வருகின்றன.  பூஞ்சேரி கூட்டுரோடு கிழக்கு கடற்கரை சாலை, கல்பாக்கம் சாலை கொட்டப்படும் உணவுக்கழிவுகளுக்காக மாடுகள், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து  வருகின்றனர்.  மேலும் வாகனங்கள் செல்லும் போது திடீரென குறுக்கே செல்வதால் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இது குறித்து சுற்றுலா பயணி கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த னர். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  ராகுல்நாத், சாலையில் சுற்றும் கால்நடைகளை கட்டுப் படுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தர விட்டார். இதையடுத்து மாடுகள் பிடிக்கப் பட்டு, உரிமையாளர்களிடம் அபராதமும் வசூலிக்கபட்டது. தற்போது இந்த நடவடிக்கை தீவிரம் காட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாடுகள் இர விலும் பகலிலும் சுற்றித் திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.