districts

img

பிச்சாவரத்தில் படகுகளை அதிகரிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சிதம்பரம், ஜன. 18- சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் கிள்ளை பேரூ ராட்சியில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம். இது சுமார் 1,100 ஹெக்டேர் பரப்பளவில் 4500 கால்வாய்களுடன் அமைந்துள்ள  உலகின் 2-வது பெரிய சதுப்பு நில காடுகள்( அலையாத்தி) ஆகும்.   பிச்சாவரம் சதுப்பு காடுகள் கடலை ஒட்டி முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்ப தால் சதுப்பு நிலங்களில் அலை யாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. மரங்களின் விழுதுகள் மீண்டும் மரமாகிறது. இங்கு செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிக மாக இருக்கும். ஆகையால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாது காக்கப்பட்ட  பகுதியாக வனத்துறை பராமரிக்கிறது. இங்குள்ள நீர்நிலை வற்றாமல் படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ள தால் கடந்த 1984 ஆம் ஆண்டு  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. இதில்  தற்போது 35 துடுப்பு படகு கள் மற்றும் 15 இயந்திர படகுகள் உள்ளன.  அதேபோல் வனத்துறை யும் தனியாக 5 படகுகள் மூலம் படகு சவாரி செய்யும் வகையில் படகு குழாம் நடத்தி வருகிறது. இந்தச் சுற்றுலா மையத்திற்கு அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலம், கோடை காலங்களில் தமிழ கம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அள வில் வருகை தந்து சதுப்பு நில காடுகளின் பச்சை பந்தல் விரித்த அலையாத்தி காடுகளில் உள்ள  சுரபுன்னை மரங்கள் உள்ளிட்ட இயற்கை அரண்களை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். அரசு விடுமுறை, பள்ளி கல்லூரிகள் விடுமுறை நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை உள்ளிட்ட நெடுந் தூரத்தில் இருந்து வருகிறார்கள். தற்போது, பொங்கல், காணும் பொங்கலையொட்டி தொடர்ந்து 4 நாள்கள் அரசு விடுமுறை விட்ட தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்  டோர் குவிந்தனர். இதில் நெடுந்தொலைவில் இருந்து வந்த ஏராளமானோர் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இது வணிகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பிய பெண் பயணி கூறுகையில், பண்டிகை காலங்க ளில் சென்னையில் இருந்து வெளி யூர்களுக்கு செல்ல கூடுதலாக பேருந்துகளை இயக்கும் அரசு, சிறப்பு பேருந்துகள் இயக்கி வரு கிறது. அதே நேரத்தில், இதுபோன்ற சுற்றுலா தலங்களில் படகு சவாரி செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கூடுதலாக படகுகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார். பிச்சாவரம் சுற்றுலா மைய வணிகர்கள் கூறுகையில், படகு சவாரி செய்ய 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனு மதிக்கப்படுகிறது. இந்த நேரத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அதிகரிக்க வேண்டும். இத னால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் படகு சவாரி செய்ய முடியும் என்றனர். தற்போது அரசு சார்பில் ரூ.13 கோடி செலவில் மேம்படுத்தும் பணி கள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி செய்வதற்கான படகு களை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்ய பிச்சாவரத்திற்கு வந்தார். அப்போது நேரம் முடிந்து விட்டது என்று வனத்துறையினர் கூறிய தால் ஆத்திரத்தில் அலுவலக கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  வெகு தொலை வில்  இருந்து வந்து படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பும் வேதனையுடன் செல்லும் நிலை தொடர்கிறது. இதில் மாற்றத்தை கொண்டு அரசு நட வடிக்கை எடுக்குமா?