districts

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் ஆதரவு

மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ஜி.ரவி
முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது மின் வாரி யத்தில் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்து உத்தர விட்டார். அதே போல இன்றைய முதல்வரும் ஒப்பந்த தொழிலாளர்களை  பணி நிரந்த ரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ஆட்சியில் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவோம்.

வழக்கறிஞர் ஆர்.கனகசபா 
வல்லூர் அனல் மின்நிலையத்தில் அனைத்து தொழிலாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்துகின்றனர் என்றாலும் பணி நிரந்தரம் கோரி பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசிற்கும், நிர்வாகத்திற்கு இந்த பிரச்சினை நன்றாகவே தெரியும். இதில் அரசு தலையிட வேண்டும். மின் உற்பத்தி நிலை யங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சாலையில் சிந்துவதால் தூசி மண்டலமாக மாறுகிறது. இது மக்களின் சுகாதாரத்திற்கு சவாலாக உள்ளது.எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அனல் மின்நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார், துணைத் தலைவர் இலக்கியா ராயல்
எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை யில் தான் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. அதற்காக விவசாய நிலங்களை கொடுத்துள்ளோம். உப்பளங்கள் அழிந்து விட்டநிலையில் அந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு அனல்  மின்நிலையத்தில் வேலை வழங்கவில்லை. அனல் மின்நிலையம் குடியிருப்புகள் கட்டியுள்ள இடத்திற்கு கூட அனுமதி வாங்க வில்லை. ஊராட்சிக்கு இதுவரை தொழில் வரி செலுத்தவில்லை. வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றி அரசிற்கும், நிர்வாகத்திற்கும் அனுப்பிவைப்போம். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வல்லூர் அனல் மின் நிலைய  கிளை செயலாளர் எச்.சதீஷ், பொருளாளர்  ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகளின்  கோரிக்கைகள்: வல்லூர் அனல் மின் நிலை யத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும், தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த தமிழக அரசு உரிய முறையில் உத்தரவு வழங்க வேண்டும். வெளியிலிருந்து தொழி லாளர்களை நியமிக்கக் கூடாது. நிரந்தரப்படுத்தும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், சாம்பல் விற்பதன் மூலம் கிடைக்கும்  பணத்தை அப்பகுதி மக்களுக்கு முழுமை யாக நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும். அப்பகுதி மக்களுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், மருத்துவம்,  மின்சார வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இதனை அரசும், நிர்வாகமும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.