districts

img

மின்வாரிய கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மின்வாரிய கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.கணக்கீட்டு பணிக்கு அலைபேசி அல்லது டேப் வழங்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கணினி சார்ந்த பொருட்களை மாற்றி தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில துணைத்தலைவர் எஸ்.ஜோதி துவக்கி வைத்து பேசினார்.திட்டக்கிளை செயலாளர் கே.சந்திரசேகரன், பொறியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் ஜெ.ஏங்கல்ஸ் ஆகியோர் பேசினர். இதில் திட்டக்கிளை பொருளாளர் ஆர்.வெங்கடேசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.