சென்னை, செப். 5 - மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக்கோரி செவ்வா யன்று (செப்.5) மின் வாரிய தலைமையகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்ட பயனாளிகள் (2018-2022) 300 பேருக்கு காப்பீட்டு நிறுவனம் பணம் தராமல் உள்ளது. அதனை வழங்க வேண்டும். பிரீமியத்தை புதுப்பித்துக் கொண்ட வர்களுக்கு, வாரிய உத்தரவுக்கு மாறாக ‘பேக்கேஜ் டீல்’ என்ற பெயரில் 30 விழுக்காடு தொகையை மட்டுமே தருகின்றனர். இந்த ‘பேக்கேஜ் டீல்’ முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தகவல்களை யும் உள்ளடக்கிய வகையில், அடையாள அட்டையை புதுப்பித்து தர வேண்டும். விதவை, விவாகரத்து பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தடையாக உள்ள நடைமுறையை கைவிட வேண்டும், மாற்றுத்திறனாளிகளிடம் ஆண்டுதோறும் கூடுதல் சான்றிதழ் கேட்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை தெற்கு, வடக்கு மண்டலங்கள் சார்பில் இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் ஏ.பழனி, மண்டலச் செயலாளர்கள் ஆர்.ராஜாமணி (தெற்கு), எஸ்.கணேசன் (வடக்கு) உள்ளிட்டோர் பேசினர்.