ராணிப்பேட்டை, மே 24 -
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் முகுந்த ராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலக குறிப் பேடுகள் தொடர்பாக மேலதிகாரிகளின் அனு மதியோடு சில ஆவணங்களை பார்வையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சி.மணி திங்கட்கிழமை (மே22) சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்தும், உடனடியாக குற்றவாளிகலை கைது செய்ய வலியுறுத்தியும் புதனன்று (மே 24) அன்று முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், கலவை தாலுகா செயலாளர் எஸ்.கிட்டு, மாவட்டக் குழு உறுப்பினர் தா.வெங்கடேசன், டி.சந்திரன், என்.ரமேஷ், ஆர்.வெங்கடேசன், ஆ.தவராஜ், வேட்டைக்காரன் பழங்குடி யின மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேட்டுபத்மாமணி (மாதர் சங்கம்), ஜெயகாந்தன், செந்தில் (வாலிபர் சங்கம்), ராதாகிருஷ்ணன், ஜெய்சங்கர், குமார் (விவசாயிகள் சங்கம்) ஆகியோர் பேசினர்.