districts

img

திருவொற்றியூர் தனியார் பள்ளி 18 நாட்களுக்குப் பின் மீண்டும் திறப்பு

சென்னை,  நவ. 13- திருவெற்றியூர் கிராமத் தெருவில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளி யில் இருமுறை ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து  பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நவீன இயந்திரம் கொண்ட வாகனத்தை பள்ளியில் நிறுத்தி வைத்து தொடர்ந்து மூன்று நாட்களாக காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து வந்த நிலை யில் எந்தவித மாசும் காற்றில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது தேர்வு எழுதப் போகும் மாணவர்களின்  நலனை கருதி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கடிதம் எழுதி பள்ளி நிர்வாகத்திலும் அளித்து இருந்தனர். இது தொடர்பாக  மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பாதிக்கப் பட்ட பெற்றோர்கள் மற்றும் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, வரு வாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலை மையில் பள்ளிக்கல்வித்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.பேச்சுவார்த்தையில் சுமுக மான முடிவு எடுக்கப்பட்டது . இதையடுத்து முதல் கட்டமாக 10 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  புதனன்று (நவ. 13) பள்ளி திறக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாண வர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக  மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு வகுப்பறைக்கு 40க்கும் மேல் மாணவர்கள் இருக்கக் கூடாது என்பதற்காக மாற்று வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு படிப்படி யாக துவங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறினார்கள்.

பெற்றோரிடம் கருத்து கேட்பு 
 பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம்  மீண்டும் கருத்து கேட்டது. அப்போது பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனை வாயு கசிவு தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா? இது வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனை நடந்தால் என்ன செய்வது என்று கேட்டனர் அதற்கு பள்ளி நிர்வாகம் பள்ளியிலேயே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்து இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஆய்வு செய்ய உள்ளதாகவும், பள்ளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி வளாகத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கல்வித்துறை,  சுகாதாரத் துறை, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் வாயு கசிவு எப்படி ஏற்பட்டது  என்ற மர்ம முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவில்லை.