திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமம் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக அங்கு வசித்து வந்த சுமார் 35 க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து அகற்றி அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் வீடு வழங்காமல் ஏழு குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் ரவிதாசன், நிர்வாகிகள் ரமேஷ் பாபு, சிவாஜி ஆகியோர் போளூர் வட்டாட்சியர் மற்றும் ஆரணி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.