காஞ்சிபுரம் ( தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து திருப்போரூர் ஒன்றியம் மானம்பதி பஜார் வீதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா உரையாற்றினார். இதில் சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சங்கர், லோகு, புலவர் கங்காதரன் (மதிமுக), சொக்கலிங்கம் (விசிக), ஜீவா, பழனிவேல்(திமுக) உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.