திருப்பத்தூர், அக்.22- குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று வழங்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர பாண்டியனை சந்தித்தனர். அப்போது, மாநில கூர்நோக்கு குழு தலைவர் வழங்கிய சுற்றறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குருமன்ஸ் பழங்குடி மக்க ளுக்கு சாதி சான்று வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவது குறித்தும் வலியுறுத்தி னார். சாதி சான்று கேட்கும் குருமன்ஸ் பழங்குடி மக்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் வருவாய் துறை சான்று வழங்க தயாராக இருக்கி றது என்றும் மாநில கூர்நோக்கு குழு தலைவர் அனுப்பிய சுற்றறிக்கையின் மீது எந்தவித பாதகமான நடவடிக்கை யும் இதுவரை எடுக்கவில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்தார். மேலும் ஆதாரங்கள் அடிப்படையில் குருமன்ஸ் பழங்குடி சாதி சான்று வழங்கு வதில் வருவாய் துறை அலுவலர் செய்யாமல் உடனுக்கு உடன் சான்று வழங்க அறிவுறுத் தப்படும் என்றும் ஆட்சியர் கூறினார். இந்த சந்திப்பின்போது குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க தலைவர் எல்.சிவலிங் கம், பொது செயலாளர் பீ.வீரபத்திரன், பொருளாளர் கோவி.அரங்கநாதன், இணை பொதுச் செயலாளர் வீரபத்திர சேகர், கலாச்சார செயலாளர் எஸ்.விஜயன், மாவட்டச் செயலாளர் சி.விஜயன், எஸ்.வஜ்ரம், எல். தருமலிங்கம், விஜயகுமார், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.