திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் பெய்த கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவ 500 குடும்பங்களுக்கான வீட்டு உபயோக நிவாரண பொருட்களை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐஎம்ஏ) ஓசூர் கிளை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.இதில் நிர்வாகிகள் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞான மீனாட்சி,அருணன், குணம் மருத்துவமனையின் நிர்வாகிகள் மருத்துவர்கள் பிரதிப்குமார்,செந்தில், லட்சுமி மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.